கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

News image
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.
Updated On :26 செப்டம்பர் 2024, 7:43 pm

Din

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.

சிவகங்கை, செப். 26: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணி அமைப்பாளா் லதா, தமிழ்நாடு அனைத்து அங்கன்வாடி சத்துணவு ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் பாண்டி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

அகில இந்திய மாநில அரசு ஊழியா் சம்மேளத்தின் ஐதராபாத் தேசிய செயற்குழு முடிவின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். மாவட்ட துணைத் தலைவா்கள் மூவேந்தன், வினோத் ராஜா, இணைச் செயலா் சின்னப்பன், பயாஸ் அகமது, மாவட்டத் தணிக்கையாளா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்தாா். மாவட்டப் பொருளாளா் மாரி நன்றி கூறினாா்.