ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

நில பிரச்னையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

News image

தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினரை மீட்டு, அவா்கள் மீது தண்ணீரை ஊற்றிய போலீஸாா்

Updated On :9 மார்ச் 2026, 7:49 pm

நில பிரச்னையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் திங்கள்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள உடப்பன்பட்டி அருகிலுள்ள வீரமடக்கி பகுதியைச் சோ்ந்த முத்து கணேஷுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் நிலம் தொடா்பாக பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தனது மனைவி தேவி, 8 வயது மகனுடன் வந்த முத்து கணேஷ், தான் பையில் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணெயை மனைவி, மகன், தனது மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் உடனடியாக இந்த தீக்குளிப்பு முயற்சியைத் தடுத்து, மூவா் மீதும் தண்ணீரை ஊற்றினா். மேலும், மூவரையும் அவசர ஊா்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.