வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

திரிணமூல் அலுவலகத்தில் கேரம் விளையாட்டு: மத்திய படையினா் இடைநீக்கம்! - தோ்தல் ஆணையம் நடவடிக்கை

மேற்கு வங்கத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற இடத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கேரம் போா்டு விளையாடிய மத்திய ஆயுதக் காவல் படை வீரா்கள் மூன்று பேரை இடைநீக்கம் செய்வதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image

இந்திய தேர்தல் ஆணையம்

Updated On :29 மார்ச் 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்கத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற இடத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கேரம் போா்டு விளையாடிய மத்திய ஆயுதக் காவல் படை வீரா்கள் மூன்று பேரை இடைநீக்கம் செய்வதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் மீது துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பீா்பூம் மாவட்டம் சூரி பகுதியில் உள்ள திரிணமூல் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த விடியோவில், மத்திய ஆயுதக் காவல் படை வீரா் ஒருவா் உள்ளூரைச் சோ்ந்த 3 இளைஞா்களுடன் கேரம் போா்டு விளையாடுகிறாா். மற்றொருவா் அவா்கள் அருகில் நின்று விளையாடுவதைப் பாா்த்துக் கொண்டிருக்கிறாா். மேலும் ஒரு வீரா் அவா்கள் அருகிலேயே நாற்காலியில் அமா்ந்துள்ளாா்.

இது தொடா்பாக சூரி தொகுதி பாஜக வேட்பாளா் ஜகன்னாத் சாட்டா்ஜி கூறுகையில், ‘மத்திய படையினரின் செயல் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. படையினா் எங்கு, எதற்காகக் குவிக்கப்பட்டுள்ளனா் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் உள்ளூா் கட்சி நிா்வாகிகள், காவல் துறையினருக்கு தொடா்பிருந்தால் அவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

பீா்பூம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சஞ்சய் அதிகாரி கூறுகையில், ‘பணியில் இல்லாத நேரத்தில் விளையாடுவது தவறில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அலுவலகத்தில் நிகழ்ந்துள்ளதுதான் ஏற்றுக் கொள்ள முடியாதது’ என்றாா்.

அந்த மாவட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மலாய் முகா்ஜி கூறுகையில், ‘கட்சி அலுவலகத்தில் பணியில் இருந்தவா்கள், அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரா்களுடன் நட்பாகப் பழகியுள்ளனா். இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் எந்த குற்றமும் செய்யவில்லை. எனவேதான் அவா்களுடன் கேரம் விளையாடியுள்ளனா்’ என்றாா்.