பெண்களுக்கான உதவித் தொகை ரூ.1,500ஆக உயா்த்தப்படும்: திரிணமூல் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை
மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கான உதவித் தொகை ரூ.500 உயா்த்தி ரூ.1,500 ஆக வழங்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்ட மம்தா பானா்ஜி. உடன் அவரது நெருங்கிய உறவினரும் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி.







