ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மானாமதுரையில் மீண்டும் தண்டவாள கிளிப்புகள் அகற்றம்: போலீஸ் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை மீண்டும் தண்டவாள கிளிப்புகள் அகற்றப்பட்டு கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 8:58 pm

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை மீண்டும் தண்டவாள கிளிப்புகள் அகற்றப்பட்டு கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மானாமதுரை அருகே சூடியூா் என்ற இடத்தில் கடந்த 16 -ஆம் தேதி ரயில் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த 420 கிளிப்புகள் அகற்றப்பட்டு கீழே கிடந்தன. இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா், ரயில்வே உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மானாமதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் 5 கிளிப்புகள் அகற்றப்பட்டு, கீழே கிடந்தன.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீஸாா் கிளிப்புகள் அகற்றப்பட்டு கிடந்தது குறித்து விசாரணை நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் மனநலம் பாதித்து சுற்றி திரிந்தவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.