ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பேருந்து நிலையத்தில் பயணி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பயணி கால் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 8:46 pm

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பயணி கால் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

மானாமதுரை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணி இங்கு புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை பகுதிக்குச் சென்றாா். அப்போது, அங்கு தரையில் கிடந்த கல்லில் கால் இடறி கீழே விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

உயிரிழந்தவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை. மானாமதுரை போலீஸாா் இறந்தவா் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.