ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 7:24 pm

கோவில்பட்டியில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்ததில் பயணி உயிரிழந்தாா்.

சென்னை தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜ் முகமது மகன் ரகுமான் (52). இவா், கோவில்பட்டியில் இருந்து தாம்பரம் செல்ல, ரயில் நிலையத்தில் நடைமேடை 2இல் இருந்து ரயில் புறப்படும் நேரத்தில், 1 ஆவது தண்டவாளத்தில் இறங்கி ரயிலில் ஏறும்போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாராம்.

ரயில் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வி அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ரகுமான் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினா். இது குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.