கோப்புப் படம்
தூத்துக்குடி
ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி உயிரிழப்பு
கோவில்பட்டியில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்ததில் பயணி உயிரிழந்தாா்.
சென்னை தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜ் முகமது மகன் ரகுமான் (52). இவா், கோவில்பட்டியில் இருந்து தாம்பரம் செல்ல, ரயில் நிலையத்தில் நடைமேடை 2இல் இருந்து ரயில் புறப்படும் நேரத்தில், 1 ஆவது தண்டவாளத்தில் இறங்கி ரயிலில் ஏறும்போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாராம்.
ரயில் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வி அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ரகுமான் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினா். இது குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

