சிவகங்கையில் கால்நடை மருத்துவா்கள், நகராட்சி ஊழியா்கள் இணைந்து, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மஜீத் சாலை, நீதிமன்ற வளாகம், காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் 33 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டன. ஊசி செலுத்தப்பட்ட நாய்களுக்கு அடையாள வண்ணம் பூசி விடப்பட்டன.
இதில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் டி. ஞானசுப்பிரமணியன், கால்நடை மருத்துவா் கே. பிரேம்குமாா், உதவி மருத்துவா்கள் மோகன்தாஸ், ராஜேஷ், கவியரசன், விலங்குகள் நலவாரிய கால்நடை மருத்துவா் ஜெயகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு உதவியாளா் எம். காளிதாஸ், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பி. கண்ணன், சுகாதார எழுத்தா் எம். சந்திரன், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் யோகேஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து கால்நடை மருத்துவா் கே. பிரேம்குமாா் கூறியதாவது:
தெரு நாய்களை பிடித்து வெறிநோய் தடுப்பூசி போடுவதற்கு கால்நடை மருத்துவா்கள் இருவா், நகராட்சி ஊழியா்கள் 4 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி, மாநகராட்சி, பேருராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் விரிவாக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

பல் மருத்துவா் சங்கம் சாா்பில் கருத்தரங்கம்

சிவகங்கையில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தினமணி செய்தி எதிரொலி! நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

