தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

கோரிக்கை மனு எழுதவரும் பொதுமக்களிடம் ஒரு மனுவுக்கு ரூ. 100 வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து, மனு எழுதும் நபா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

News image
Updated On :15 டிசம்பர் 2025, 11:08 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை: கோரிக்கை மனு எழுதவரும் பொதுமக்களிடம் ஒரு மனுவுக்கு ரூ. 100 வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து, மனு எழுதும் நபா்களுக்கு போலீஸாா் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வருகை தந்து மனு அளிக்கின்றனா். இந்த நிலையில், மனுக்களை எழுதுவதற்காக மாற்றுத் திறனாளிகள், முதியோா் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தைச் சுற்றியிருந்த சிலரிடம் மனு எழுதச் சென்றபோது, அவா்களிடம் ஒரு மனுவுக்கு ரூ.100 வசூலிப்பதாக உயா் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து அதிகாரிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பணியிலிருந்த காவல் துறையினரை விசாரிக்க அறிவுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மனுக்கள் எழுதுபவா்களிடம் பொதுமக்களிடமிருந்து கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது என்றும், மீறி வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.