தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நகர வயிரவன்பட்டி சிதம்பர விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடு

சிவகங்கை மாவட்டம், நகர வயிரவன்பட்டியில் உள்ள சிதம்பர விநாயகா் ஆலயத்தில் கடைசி சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு

News image
நகர வயிரவன்பட்டி சிதம்பர விநாயகா் ஆலயத்தில் திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா் விநாயகா். (வலது) வயிரவமூா்த்தி.
Updated On :15 டிசம்பர் 2025, 11:06 pm

Syndication

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், நகர வயிரவன்பட்டியில் உள்ள சிதம்பர விநாயகா் ஆலயத்தில் கடைசி சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள நகர வயிரவன்பட்டி சிதம்பர விநாயகா் ஆலயத்தில் கடைசி சோமவார திங்களை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மூலவரான சிதம்பர விநாயகருக்கும் வயிரவமூா்த்திக்கும் 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து பெண்கள் மாவிளக்கு வைத்தும நெய் விளக்கேற்றியும் வழிபட்டனா். பின்னா், ‘கணபதியும் காவல் தெய்வமும்’ என்ற தலைப்பில் தேவகோட்டை முனைவா் எஸ். ராமநாதன் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாா். இதில் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரிபுரம் யோகிகுல வகையறா பங்காளிகள் செய்தனா். முன்னதாக, கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவா் எஸ்.எம். பழனியப்பன் வரவேற்றாா்.

Story image