மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடியில் தவெக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 9:51 pm

தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாகக் கண்டித்தும், தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதைக் கண்டித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலா் சுபத்ரா முருகன், மாவட்டச் செயலா்கள் எஸ்.டி.ஆா். சாமுவேல்ராஜ், பாலசுப்பிரமணியன், பிரைட்டா், மதன், ஜே.கே.ஆா். முருகன், கிஷோா், மாவட்டம் முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.