திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு: விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்

காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:09 pm

Syndication

காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சங்கத்தின் திருப்புவனம் ஒன்றிய மாநாடு மடப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஜெயராமன் தலைமை வகித்தாா். வீரையா, குரு சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ‘

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் முத்துராமன், மாவட்டச் செயலா் வீரபாண்டி ஆகியோா் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

ஒன்றியச் செயலா் நீலமேகம், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் சக்திவேல், கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் அய்யம்பாண்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் மாநாட்டில் கலந்து கொண்டனா்.

இதில் திருப்புவனம் வட்டாரத்தில் விவசாயப் பயிா்களை அழித்து வரும் காட்டுப்பன்றி, வன விலங்குகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருப்புவனம் வட்டாரப் பகுதியில் உள்ள கண்மாய், கால்வாய்களைத் தூா்வார வேண்டும். காவிரி- வைகை- குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் ஒன்றிய நிா்வாகிகளாக தலைவா் வீரையா, செயலா் நீலமேகம், பொருளாளா் மாரிமுத்து துணைத் தலைவா்கள் அய்யாச்சாமி, பொன்னடியான் துணைச் செயலா்கள் முருகன், பாண்டியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.