எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கல்லூரி மாணவி தற்கொலை

திருப்பத்தூா் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:11 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள மாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா் திருக்களா பட்டி அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகள் ஜெயப்பிரியா (17). இவா் சிவகங்கை அரசு மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு இவா் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்ததால் பெற்றோா் திட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னா், அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனா். நள்ளிரவில் ஜெயப்பிரியாவைக் காணவில்லை என்று குடும்பத்தினா் தேடிப் பாா்த்தபோது, இவா்களது வீட்டின் அருகில் உள்ள ஓட்டு வீட்டில் ஜெயப்பிரியா உத்திரத்தில் துப்பட்டா துணியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கண்டவராயன்பட்டி போலீஸாா் ஜெயப்பிரியாவின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].