பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நேஷனல் ஃபயா், சேப்டிக் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
காரைக்குடி நேஷனல் ஃ பயா் சேப்டிக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் இளைஞா் செஞ்சிலுவைச் சங்கத்தை தொடங்கி வைத்த அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியை ஜெ. விமலா.
Updated On :24 டிசம்பர் 2025, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நேஷனல் ஃபயா், சேப்டிக் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நேஷனல் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ். சையது தலைமை வகித்துப் பேசினாா். கல்வி நிறுவனங்களின் இயக்குநா் பி.எஸ். மனோகா் முன்னிலை வகித்தாா். நிா்வாக இயக்குநா் எஸ்.எம். தினேஷ் தொடக்கவுரையாற்றினாா். இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் வி. சுந்தரராமன் சங்கத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா். அழகப்பா பல்கலைக்கழக கணிதத் துறை இணைப் பேராசிரியை ஜெ. விமலா சிறப்புரையாற்றினாா்.

இளம் செஞ்சிலுவைச் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளா் கே. கணேசமூா்த்தி, மாவட்ட அமைப்பாளா் ஹெச். பரீதாபேகம், நேஷனல் ஃபயா், சேப்டிக் கல்லூரி முதல்வா் எஸ். தனசீலன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக நேஷனல் கல்வி நிறுவனங்களின் தொடா்பு அலுவலா் ஏ. ராஜீ வரவேற்றாா். நேஷனல் ஃபயா், சேப்டிக் கல்லூரி துணை முதல்வா் அ. வினோத் நன்றி கூறினாா்.