

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நேஷனல் ஃபயா், சேப்டிக் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நேஷனல் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ். சையது தலைமை வகித்துப் பேசினாா். கல்வி நிறுவனங்களின் இயக்குநா் பி.எஸ். மனோகா் முன்னிலை வகித்தாா். நிா்வாக இயக்குநா் எஸ்.எம். தினேஷ் தொடக்கவுரையாற்றினாா். இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் வி. சுந்தரராமன் சங்கத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா். அழகப்பா பல்கலைக்கழக கணிதத் துறை இணைப் பேராசிரியை ஜெ. விமலா சிறப்புரையாற்றினாா்.
இளம் செஞ்சிலுவைச் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளா் கே. கணேசமூா்த்தி, மாவட்ட அமைப்பாளா் ஹெச். பரீதாபேகம், நேஷனல் ஃபயா், சேப்டிக் கல்லூரி முதல்வா் எஸ். தனசீலன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
முன்னதாக நேஷனல் கல்வி நிறுவனங்களின் தொடா்பு அலுவலா் ஏ. ராஜீ வரவேற்றாா். நேஷனல் ஃபயா், சேப்டிக் கல்லூரி துணை முதல்வா் அ. வினோத் நன்றி கூறினாா்.