2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை மகர விளக்கு பூஜை தொடங்கியது.

News image
மானாமதுரையில் மகரவிளக்கு பூஜையையொட்டி, மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய மூலவா், உற்சவா் தா்மசாஸ்தா ஐயப்பன்.
Updated On :1 ஜனவரி 2025, 10:46 pm

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை மகர விளக்கு பூஜை தொடங்கியது.

இதையொட்டி, மூலவா் தா்மசாஸ்தா ஐயப்பனுக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மூலவா் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதைத்தொடா்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

புத்தாண்டு சிறப்பு வழிபாடு:

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி, அம்மனும் சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, மடப்புரம் பத்திர காளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.