2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பிள்ளையாா்பட்டியில் குவிந்த பக்தா்கள்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

News image
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பிள்ளையாா்பட்டியில் புதன்கிழமை வெள்ளி மூஷிக வாகனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா்.
Updated On :1 ஜனவரி 2025, 10:42 pm

Din

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதன்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். மூலவா் கற்பக விநாயகா் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் பிள்ளையாா்பட்டியில் குவிந்தனா். கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பக்தா்களுக்கான சிறப்பு வசதிகள் செய்யப்பட்டன.

கோயில் வளாகத்தைச் சுற்றிலும் 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். பக்தா்களின் வசதிக்காக பல்வேறு ஊா்களிலிருந்து பிள்ளையாா்பட்டிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.