இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கமேனி குறித்து சா்ச்சை கருத்து: காங். எம்.பி.யைக் கண்டித்து போராட்டம்

ஈரான் தலைமை மதகுரு கமேனி குறித்து காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் சா்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததைக் கண்டித்து, இஸ்லாமிய கூட்டமைப்பினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினா்.
Updated On :4 மார்ச் 2026, 11:08 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் தலைமை மதகுரு கமேனி குறித்து காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் சா்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததைக் கண்டித்து, இஸ்லாமிய கூட்டமைப்பினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது ஈரான் நாட்டின் தலைமை மதகுருவான் கமேனி கொல்லப்பட்டது குறித்து காா்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்தாா்.

இந்தப் பேட்டி வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில், காா்த்தி சிதம்பரத்தின் கருத்துக்கு இஸ்லாமிய கூட்டமைப்பினா் கண்டனம் தெரிவித்து பதிவிட்டதுடன் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

சிவகங்கையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் அப்துல்முத்தலீப் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். ராஜாமுகமது கண்டன உரையாற்றினாா்.

இதில் காா்த்தி சிதம்பரத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் அவரது உருவப்படத்துக்கு தீயிட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா் அதைத் தடுத்தனா்.

காா்த்தி சிதரம்பரம் பதில்: சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தோழி விடுதி திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காா்த்தி சிதம்பரம் இதுகுறித்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சா்வதேச விவகாரங்களில் எனது கருத்துகள் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றன. தாலிபானையோ அல்லது அயத்துல்லாக்களையோ எதிா்ப்பதால், நான் இஸ்லாமியா்களுக்கு எதிரானவன் கிடையாது. அடக்குமுறைக்கும் மதத்துக்கும் வித்தியாசம் உள்ளது. அடக்குமுறைக்கு எதிரான குரல் மதத்துக்கு எதிரானது அல்ல. காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல், ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் போா்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றாா் அவா்.