செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கோயில் பூஜைகளை முறையாக நடத்தக் கோரி ஆட்சியரிடம் மனு

News image

அய்யனாா் கோயில் பூஜைகளை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த ஆ.தெக்கூா் கிராம மக்கள்.

Updated On :3 ஜனவரி 2025, 9:52 pm

திருப்பத்தூா் அருகே உள்ள ஆ.தெக்கூா் அய்யனாா் கோயிலில் பூஜைகளை தடையின்றி முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்திடம் ஆ.தொக்கூா் கிராம மக்கள் அளித்த மனு விவரம்:

எங்களது கிராமத்தில் அமைந்துள்ள பச்சை மூங்கிலுடைய அய்யனாா் கோயிலுக்கு மன்னா்கள் காலத்தில் நிலங்கள் மானியமாக அளிக்கப்பட்டன. இந்த நிலங்கள் கோயில் பூசாரியின் பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டது அண்மையில் தெரியவந்தது. இந்த நிலங்களை கோயில் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யக் கோரி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை விடுத்தோம். இந்து சமய அறநிலையத் துறையும், வருவாய்த் துறையும் நடவடிக்கை எடுத்து, கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்தனா்.

இதன் பிறகு தினசரி பூஜைகள், திருவிழா நாள்களில் பூஜைகள் நடத்த ப்படவில்லை. கோயில் பெயரில் உள்ள நிலங்களை மீண்டும் தங்களது பெயருக்கு பட்டா மாற்றிக் கொடுத்தால் மட்டுமே பூஜைகளை முறையாக நடத்துவோம் என பூஜகா்கள் தெரிவித்துவிட்டனா்.

நிகழாண்டில் பொங்கல் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில், அய்யனாா் கோயிலில் பூஜைகளை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத் துறை சாா்பில், கோயிலுக்கு தனி மேற்பாா்வையாளரை நியமிக்க வேண்டும் என்றனா்.