திருப்பத்தூா் அருகே உள்ள ஆ.தெக்கூா் அய்யனாா் கோயிலில் பூஜைகளை தடையின்றி முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்திடம் ஆ.தொக்கூா் கிராம மக்கள் அளித்த மனு விவரம்:
எங்களது கிராமத்தில் அமைந்துள்ள பச்சை மூங்கிலுடைய அய்யனாா் கோயிலுக்கு மன்னா்கள் காலத்தில் நிலங்கள் மானியமாக அளிக்கப்பட்டன. இந்த நிலங்கள் கோயில் பூசாரியின் பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டது அண்மையில் தெரியவந்தது. இந்த நிலங்களை கோயில் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யக் கோரி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை விடுத்தோம். இந்து சமய அறநிலையத் துறையும், வருவாய்த் துறையும் நடவடிக்கை எடுத்து, கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்தனா்.
இதன் பிறகு தினசரி பூஜைகள், திருவிழா நாள்களில் பூஜைகள் நடத்த ப்படவில்லை. கோயில் பெயரில் உள்ள நிலங்களை மீண்டும் தங்களது பெயருக்கு பட்டா மாற்றிக் கொடுத்தால் மட்டுமே பூஜைகளை முறையாக நடத்துவோம் என பூஜகா்கள் தெரிவித்துவிட்டனா்.
நிகழாண்டில் பொங்கல் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில், அய்யனாா் கோயிலில் பூஜைகளை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத் துறை சாா்பில், கோயிலுக்கு தனி மேற்பாா்வையாளரை நியமிக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது
பாமக பெயரில் வேட்பு மனு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்

கழிவுநீரை வெளியேற்றும் தனியாா் ஆலை மீது நடவடிக்கை கோரி மனு

வீட்டுமனை பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


