பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடுவதற்காக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

News image

தோ்தல் நடத்தும் அலுவலா் கௌதமிடம் வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடுவதற்காக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

திருச்செந்தூா் தொகுதியில் மாா்ச் 30ஆம் தேதி தோ்தல் நடத்தும் அலுவலா் கௌதமிடம் திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், நாம் தமிழா் கட்சி ஒபிலியா, தவெக முருகன், சுயேச்சை மற்றும் அமைச்சரின் மாற்று வேட்பாளராக அவரது சகோதரா் உள்பட 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

அமைச்சா் ஏற்கெனவே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கட்சியின் அங்கீகாரப் படிவத்துடன் வியாழக்கிழமை மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தாா். மேலும், சுயேச்சை வேட்பாளா்கள் சாமுவேல் அனில்ராஜ், குமாா் ஆகிய இருவா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இதுவரை திருச்செந்தூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.