கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஓடி உலகச் சாதனை படைத்த இரட்டையா்கள்!
காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் பயிலும் இரட்டையா்களான பிரதீஷ், பிரணீஷ் ஆகியோா் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 12 நாள்களில் ஓடி உலகச் சாதனை படைத்தனா்.

காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவா்கள் பிரதீஷ், பிரணீஷ் ஆகியோருக்கு உலக சாதனை புரிந்ததற்கான சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கிய சோழன் உலகச் சாதனைப் புத்தக நிறுவனா் நீலமேகம் நிமலன். உடன் பள்ளித் தலைவா் எஸ்பி. குமரேசன் உள்ளிட்டோா்.







