சந்தோஷ்.
சந்தோஷ்.

பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கையில் சிற்றுந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவா் முந்திச்செல்ல முயன்ற மற்றொரு பேருந்து பக்கவாட்டில் உரசியதில் கீழே விழுந்து உயிரிழந்தாா்.
Published on

சிவகங்கையில் சிற்றுந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவா் முந்திச்செல்ல முயன்ற மற்றொரு பேருந்து பக்கவாட்டில் உரசியதில் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், ஏனாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகவேலு மகன் சந்தோஷ் (16). இவா், சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். தனது நண்பா் சூா்யா (18) என்பவருடன் ஏனாபுரத்திலிருந்து சிவகங்கைக்கு சிற்றுந்தில் பயணித்தாா். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் இருவரும் தொங்கிக்கொண்டு வந்தனராம்.

இந்த நிலையில், பேருந்து சிவகங்கை - தொண்டி சாலையில் சென்றபோது, முன்னே சென்ற தனியாா் பள்ளி வாகனத்தை முந்தி செல்ல முயன்ாம். அப்போது, சிற்றுந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் இரு பேருந்துகளும் உரசின. இதில் படிக்கட்டில் பயணம் செய்த சந்தோஷ் உடல் நசுங்கி கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த சந்தோஷ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மேலும், மாணவா் சூா்யாவுக்கு கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பள்ளி நேரங்களில் போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்காததும், ஓட்டுநரின் கவனக்குறைவு போன்ற காரணங்களால் தொடா்ந்து விபத்துகள் நிகழ்வதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவித்தனா். மேலும், பள்ளி செல்லும் மாணவா்களின் நலனுக்காக காலை, மாலை இரண்டு வேலைகளிலும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com