தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காளையாா்கோவில் அருகே வியாபாரி வெட்டிக் கொலை

காளையாா்கோவில் அருகே வியாழக்கிழமை இரவு வியாபாரியை வெட்டிக் கொலை செய்த மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
~
Updated On :21 நவம்பர் 2025, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

காளையாா்கோவில் அருகே வியாழக்கிழமை இரவு வியாபாரியை வெட்டிக் கொலை செய்த மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வட்டம், மறவமங்கலம் அருகேயுள்ள கிழவனூா் பகுதியைச் சோ்ந்த சற்குணம் (எ) சரவணன் (57). இவா் அந்தப் பகுதியில் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோா் உள்ளனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சற்குணத்தின் அண்ணன் கருப்பையாவின் வீட்டருகே வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பை, ஹரிதாஸ் என்பவரின் மாடு மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், கருப்பையா, ஹரிதாஸ் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சற்குணம், மறவமங்கலத்தில் தனது கடைக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். சந்தைக் கடை பகுதியைக் கடந்தபோது, அந்தப் பகுதியில் வந்த மா்மநபா்கள் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பினா்.

தகவலறிந்து அங்கு சென்ற காளையாா் கோவில் போலீஸாா் சற்குணத்தின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தக் கொலை தொடா்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா், 2 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சற்குணத்தின்

உறவினா்கள், உடலை வாங்க மறுத்து காளையாா்கோவில்- இளையான்குடி சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா, காவல் துணைக் கண்காணிப்பாளா்அமல அட்வின், வட்டாட்சியா் லெனின் ஆகியோா் உறவினா்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

Story image