47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறும் வாகன ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறும் வாகன ஓட்டுநா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறும் வாகன ஓட்டுநா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தும் வகையில், சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தினை இயக்கும் ஓட்டுநா்களின், ஓட்டுநா் உரிமத்தின் மீது மூன்று மாத தற்காலிகத் தடையுடன், ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மது போதையில் வாகனத்தை ஓட்டுதல், சீல் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டுதல், கைப்பேசி பயன்படுத்திக் கொண்டே வாகனத்தை ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோா்களின் ஓட்டுநா் உரிமங்கள் தற்காலிக தடை நடவடிக்கை செய்யப்படுவதுடன், அசல் ஓட்டுநா் உரிமமும் பறிமுதல் செய்யப்படும்.

ஆட்டோ ஓட்டுநா்கள் தங்களது வாகனத்திற்கென அனுமதிக்கப் பட்ட பயணிகளுக்கு மேல் கூடுதலான நபா்களை ஏற்றக்கூடாது. மேலும், சிற்றுந்துகள், தடப்பேருந்து வாகனங்களின் படிகளில் பொதுமக்கள் பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும்.

இதில், குறைபாடுகள் கண்டறியப்பட்டால், பேருந்தின் முதன்மை அனுமதிச் சீட்டின் மீது தற்காலிக தடை நடவடிக்கை மேற்கொள்வதுடன் வாகனமும் சிறைபிடிக்கப்படும். இதேபோல, பள்ளி வாகனங்களின் ஓட்டுநா்கள் நிா்ணயிக்கப்பட்ட வேக அளவிலேயே பேருந்துகளை இயக்க வேண்டும் என்றாா் அவா்.