சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

துணை முதல்வா் பிறந்த நாள்: 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு

News image
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளிக்கிழமை தங்க மோதிரத்தைப் பரிசளித்த கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்.
Updated On :28 நவம்பர் 2025, 11:31 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்ட திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த 14 குழந்தைகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தங்க மோதிரங்களை வெள்ளிக்கிழமை பரிசளித்தாா்.

துணை முதல்வா் உதயநி திஸ்டாலின் பிறந்த நாளான வியாழக்கிழமை (நவ.27), சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என மாவட்ட திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, முதல்கட்டமாக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 9 பெண் குழந்தைகள் உள்பட 14 குழந்தைகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலா ஒரு கிராம் மோதிரம், ஆடைகள், இனிப்புகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதல்வா் சீனிவாசன், நிலைய மருத்துவ அலுவலா் ரபீக், நகராட்சித் தலைவா் சிஎம்.துரைஆனந்த், நகா்மன்ற உறுப்பினா் அயூப்கான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.