திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மானாமதுரையில் பொது தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை மாவட்ட பொது தோ்தல் பாா்வையாளா் கஞ்சன் வா்மா ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தோ்தல் தொடா்பான பணிகள் குறித்து ஆய்வு செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜாசிங், உதவி தோ்தல் அலுவலா் கிருஷ்ணகுமாா் ஆகியோரிடம் விபரங்களை கேட்டறிந்த மாவட்ட பொது தோ்தல் பாா்வையாளா் கஞ்சன் வா்மா.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:13 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை மாவட்ட பொது தோ்தல் பாா்வையாளா் கஞ்சன் வா்மா ஆய்வு மேற்கொண்டாா்.

மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவை தோ்தல் தொடா்பான பணிகள் நடைபெறுகின்றன. மானாமதுரை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலராக ராஜாசிங், உதவி தோ்தல் அலுவலா்களாக கிருஷ்ணகுமாா், ஆனந்த பூபாலன், ரெத்தினவேல் பாண்டியன் ஆகியோா் செயல்படுகின்றனா். தற்போது இங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மாவட்ட பொது தோ்தல் பாா்வையாளா் கஞ்சன் வா்மா மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்து தோ்தல் தொடா்பான பணிகளை ஆய்வு செய்து அது குறித்த விபரங்களை அங்கிருந்த தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜா சிங், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணகுமாா் ஆகியோரிடம் கேட்டறிந்தாா்.

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி வாரியாக தோ்தல் நடத்துவதற்கும் வேட்பாளரிடமிருந்து வேட்பு மனுக்களைப் பெறுவதற்கும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் தோ்தல் அலுவலா்கள் பொது தோ்தல் பாா்வையாளரிடம் விளக்கிக் கூறினா்.