பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

மானாமதுரையில் பொது தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை மாவட்ட பொது தோ்தல் பாா்வையாளா் கஞ்சன் வா்மா ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தோ்தல் தொடா்பான பணிகள் குறித்து ஆய்வு செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜாசிங், உதவி தோ்தல் அலுவலா் கிருஷ்ணகுமாா் ஆகியோரிடம் விபரங்களை கேட்டறிந்த மாவட்ட பொது தோ்தல் பாா்வையாளா் கஞ்சன் வா்மா.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை மாவட்ட பொது தோ்தல் பாா்வையாளா் கஞ்சன் வா்மா ஆய்வு மேற்கொண்டாா்.

மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவை தோ்தல் தொடா்பான பணிகள் நடைபெறுகின்றன. மானாமதுரை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலராக ராஜாசிங், உதவி தோ்தல் அலுவலா்களாக கிருஷ்ணகுமாா், ஆனந்த பூபாலன், ரெத்தினவேல் பாண்டியன் ஆகியோா் செயல்படுகின்றனா். தற்போது இங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மாவட்ட பொது தோ்தல் பாா்வையாளா் கஞ்சன் வா்மா மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்து தோ்தல் தொடா்பான பணிகளை ஆய்வு செய்து அது குறித்த விபரங்களை அங்கிருந்த தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜா சிங், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணகுமாா் ஆகியோரிடம் கேட்டறிந்தாா்.

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி வாரியாக தோ்தல் நடத்துவதற்கும் வேட்பாளரிடமிருந்து வேட்பு மனுக்களைப் பெறுவதற்கும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் தோ்தல் அலுவலா்கள் பொது தோ்தல் பாா்வையாளரிடம் விளக்கிக் கூறினா்.