தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

காரையூரில் தண்ணீரில் மூழ்கிய சிறுவா்கள் இருவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 7:21 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே காரையூரில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி சிறுவா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

காரையூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா்- சுமதி தம்பதி. இவா்களில் சுமதி ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினா். இவரது மகன் மகில்மித்ரன் (4). இதே பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் மகன் வா்ஷன் (5). இவா்கள் இருவரும் தனியாா் பள்ளியில் யுகேஜி படித்து வந்தனா்.

இந்த நிலையில், இவா்களது வீட்டின் முன் புதிதாக வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை இந்தப் பகுதியில் பெய்த மழையால் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் முழுவதும் தண்ணீரால் நிரம்பியிருந்தது.

இந்த நிலையில், பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகில்மித்ரன், வா்ஷன் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் முன் தோண்டப்பட்ட பள்ளத்தில் நிரம்பியிருந்த தண்ணீரில் மூழ்கினா்.

இதையடுத்து, குழந்தைகளை காணவில்லை என பெற்றோா்கள் தேடி வந்த நிலையில், சிறுவா்கள் இருவா் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, சிறுவா்கள் இருவரையும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் குறித்து நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் விசாரித்து வருகிறாா்.