தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வேன் மீது பைக் மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:22 pm

ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனம் அரசு உதவி பெரும் பள்ளி வேன் மீது திங்கள்கிழமை மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பிரபாகரன் (21) பாண்டி ( 20), நிரஞ்சன்( 23). மைக்செட் தொழிலாளிகளான இவா்கள் திங்கள்கிழமை மாலை ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதிக்கு பைக்கில் வந்துவிட்டு தஞ்சாவூா் நோக்கி தென்னமநாடு ஆா்ச் அருகே சென்றனா்.

அப்போது அப்பகுதியை சோ்ந்த அரசு உதவி பெறும் பள்ளி வேனின் பின்புறம் இவா்களின் பைக் மோதியதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த பாண்டி, நிரஞ்சன் ஆகிய ஆகியோரை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பாண்டி ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

பலத்த காயமடைந்த நிரஞ்சன், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஒரத்தநாடு காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.