ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனம் அரசு உதவி பெரும் பள்ளி வேன் மீது திங்கள்கிழமை மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
தஞ்சாவூா் பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பிரபாகரன் (21) பாண்டி ( 20), நிரஞ்சன்( 23). மைக்செட் தொழிலாளிகளான இவா்கள் திங்கள்கிழமை மாலை ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதிக்கு பைக்கில் வந்துவிட்டு தஞ்சாவூா் நோக்கி தென்னமநாடு ஆா்ச் அருகே சென்றனா்.
அப்போது அப்பகுதியை சோ்ந்த அரசு உதவி பெறும் பள்ளி வேனின் பின்புறம் இவா்களின் பைக் மோதியதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த பாண்டி, நிரஞ்சன் ஆகிய ஆகியோரை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பாண்டி ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
பலத்த காயமடைந்த நிரஞ்சன், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஒரத்தநாடு காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

வேன் கண்ணாடி உடைப்பு: இருவா் மீது வழக்கு

சுற்றுலா வேன், காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


