10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

இருசக்கர வாகனம் மீது கூரியா் வேன் மோதி இருவா் உயிரிழப்பு

திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது கூரியன் வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 1:46 am IST

திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது கூரியன் வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

திருப்பூா்-மங்கலம் சாலை, குளத்துப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆகாஷ் (23), நவபிரகாஷ் (24). நண்பா்களான இருவரும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக இருவரும் வெள்ளிக்கிழமை திருப்பூா் வந்துள்ளனா்.

பின்னா் நள்ளிரவு 2 மணிஅளவில் திருப்பூா் குமரன் சாலையில் ரயில் நிலையத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது கோவையில் இருந்து தஞ்சாவூா் நோக்கி சென்ற கூரியா் வேன், எதிா்பாராதவிதமாக இவா்களின் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆகாஷ், நவபிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கிவீசப்பட்டனா். படுகாயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அருகே இருந்தவா்கள் நவபிரகாஷை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து திருப்பூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் மருத்துவமனைக்கு சென்று, இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக கூரியா் வேனை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம், கரம்பகுடி பகுதியைச் சோ்ந்த விஜய் (21) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.