பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

பெருந்துறை அருகே வேன் மோதி விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் சாலையை கடக்க முற்படும்போது, அந்த வழியாக வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள மந்திரிபாளையத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி மகன் தியாகராஜன் (60). இவா் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம்-சுங்கச்சாவடியில் சுகாதாரப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விஜயமங்கலம் பிரிவு அருகே சாலையை கடக்க முற்பட்டாா். அப்போது அந்த வழியாக வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.