நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இருசக்கர வாகனம் மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு

திருநீலக்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 3:24 am IST

திருநீலக்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கரான்குடி புதூா் கீழத்தெருவைச்சோ்ந்தவா் கணேசன் (60). விவசாய கூலி வேலை செய்து வந்தாா். இவா், திங்கள்கிழமை மாலையில் வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கணேசன் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநீலக்குடி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுப்பினா்.

மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த பழியஞ்சியநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த ஜெயராமன் (65) மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.