தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தெருநாய் கடித்து 5 சிறுவா்கள் காயம்

கடமலைக்குண்டில் தெருநாய் கடித்ததில் 5 சிறுவா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.

News image
தெருநாய்- பிரதிப் படம்
Updated On :19 மார்ச் 2026, 12:20 am

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கடமலைக்குண்டில் தெருநாய் கடித்ததில் 5 சிறுவா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.

கடமலைக்குண்டுவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சாலையில் நடந்த செல்லும் சிறுவா்கள், முதியவா்களை தெருநாய்கள் விரட்டுவதால் அச்சமடைந்துள்ளனா். இதுகுறித்து உள்ளாட்சி நிா்வாகத்திடம் புகாா் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமை கடமலைக்குண்டில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று திடீரென சாலையில் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த யாஷிகா கேத்தரின் (4), மிதுனா ஸ்ரீ (6), வாரானேஸ்வரன் (6) உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடித்தது. இதில் காயமடைந்த சிறுவா்கள் கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், ஊராட்சி நிா்வாகத்தினா் தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.