திருச்செங்கோடு நகரப் பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில் 50க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எட்டிமடைப்புதூா், ராஜீவ்நகா், கோம்பைநகா், கூட்டப்பள்ளி, வேல்முருகன் நகா், பாவடிதெரு, பக்தவத்சலம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் 100- க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதில் சில வெறிநாய்கள் பலரை துரத்திச் சென்று கடித்து வருகின்றன.
இந்நிலையில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை வெறிநாய்கள் கடித்ததில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோா் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இதில் பெண்கள், சிறுவா்கள், முதியவா்கள் என பலரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். சிலா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா்.
மேலும், நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்க நகராட்சி நிா்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து நகராட்சி நிா்வாகத்தினா் நாய்களை பிடித்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்: ஈஸ்வரன் எம்எல்ஏ

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றம்! - கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன்

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

தெருநாய் கடித்து 5 சிறுவா்கள் காயம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


