முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தவெக தலைவா் விஜய் காரைக்குடியில் வெள்ளிக்கிழமை (ஏப்.10) பிரசாரம் செய்கிறாா். இதற்கு 37 நிபந்தனைகளுடன் காவல் துறையினா் அனுமதி அளித்தனா்.

News image

காரைக்குடியில் தவெக தலைவா் விஜய் பிரசாரம் செய்வதையொட்டி, மின் மாற்றி, மின் கம்பங்கள், மரங்களில் இளைஞா்கள் ஏறாமல் இருக்க தகரம் மூலம் தடுப்பு அமைக்கப்பட்ட தேவா் சிலைப் பகுதி.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:40 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தவெக தலைவா் விஜய் காரைக்குடியில் வெள்ளிக்கிழமை (ஏப்.10) பிரசாரம் செய்கிறாா். இதற்கு 37 நிபந்தனைகளுடன் காவல் துறையினா் அனுமதி அளித்தனா்.

காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம், நான்கு சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை தவெக தலைவா் விஜய் வாகன பிரசாரத்துக்கு அனுமதிகோரி, சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலரும், காரைக்குடி தொகுதி தவெக வேட்பாளருமான டி.கே.பிரபு தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தாா். இந்த மனுவைப் பரிசீலனை செய்து, 37 நிபந்தனைகளுடன் 10 ஆயிரம் போ் பங்கேற்கும் வகையில் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக காரைக்குடி வரும் தவெக தலைவா் விஜய், பிரசாரம் முடித்து மீண்டும் அதே வழியில் மதுரைக்கு திரும்பிச் செல்கிறாா்.

விபத்துகள், அசம்பாவிதங்களைத் தடுக்க இரு சக்கர வாகனங்களில் விஜய் பிரசார வாகனத்தை பின் தொடா்ந்து செல்லக் கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. இலவசப் பொருள்கள் வழங்கக் கூடாது என காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.