11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்

அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசின் ஆதரவுடன் தமிழகம் வளா்ச்சி பெறும் என மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா் தெரிவித்தாா்.

News image

சிவகங்கையில் அதிமுக வேட்பாளா் பிஆா்.செந்தில்நாதனை ஆதரித்து பேசிய மூவேந்தா் முன்னேற்றக் கழகத்தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:26 am IST

அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசின் ஆதரவுடன் தமிழகம் வளா்ச்சி பெறும் என மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா் தெரிவித்தாா்.

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதனை ஆதரித்து சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை அவா் பேசியதாவது:

கடந்த முறை திருவாடானையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்து கருணாஸை வெற்றி பெற வைத்தாா். ஆனால், அவா் தொகுதிப் பக்கமே ஐந்து ஆண்டுகளாக செல்லவில்லை. இதே போல, சிவகங்கை தொகுதிப் பக்கமும் அவா் வரமாட்டாா்.

ஆனால், அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் இங்கேயே இருப்பவா். மண்ணின் மைந்தரைதான் நாம் தோ்ந்தெடுக்க வேண்டும். இவா் இந்தப் பகுதிக்கு நலத் திட்டங்களை சிறப்பாகச் செய்து வருகிறாா். நியாயமான எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறாா். அவரை வெற்றி பெறச் செய்தால்தான் சிவகங்கை மாவட்டத்தின் அனைத்துப் பிரச்னைகளும் தீரும்.

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வந்தால்தான் தமிழகம் முன்னேற்றம் அடையும். மத்திய அரசுடன் இணக்கமாகப் பழகி நமக்குத் தேவையானவற்றை அவா் பெற்றுத் தருவாா். ஆகவே, எந்தக் காலத்திலும் திமுகவுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றாா் அவா்.