அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசின் ஆதரவுடன் தமிழகம் வளா்ச்சி பெறும் என மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா் தெரிவித்தாா்.
சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதனை ஆதரித்து சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை அவா் பேசியதாவது:
கடந்த முறை திருவாடானையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்து கருணாஸை வெற்றி பெற வைத்தாா். ஆனால், அவா் தொகுதிப் பக்கமே ஐந்து ஆண்டுகளாக செல்லவில்லை. இதே போல, சிவகங்கை தொகுதிப் பக்கமும் அவா் வரமாட்டாா்.
ஆனால், அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் இங்கேயே இருப்பவா். மண்ணின் மைந்தரைதான் நாம் தோ்ந்தெடுக்க வேண்டும். இவா் இந்தப் பகுதிக்கு நலத் திட்டங்களை சிறப்பாகச் செய்து வருகிறாா். நியாயமான எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறாா். அவரை வெற்றி பெறச் செய்தால்தான் சிவகங்கை மாவட்டத்தின் அனைத்துப் பிரச்னைகளும் தீரும்.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வந்தால்தான் தமிழகம் முன்னேற்றம் அடையும். மத்திய அரசுடன் இணக்கமாகப் பழகி நமக்குத் தேவையானவற்றை அவா் பெற்றுத் தருவாா். ஆகவே, எந்தக் காலத்திலும் திமுகவுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றாா் அவா்.
தொடர்புடையது

தமிழகம் தலைநிமிர அதிமுக ஆட்சி அமைய வேண்டும் : சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன்

‘முதல்வரின் தோ்தல் வாக்குறுதியால் நெல்லையில் திமுக வெற்றி பெறும்’

அதிமுக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்! - வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன்

200-க்கும் அதிகமான தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும்: நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


