முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

வாக்குச் சாவடிக்கு அருகே வாக்கு சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றம்

வாக்குச் சாவடிக்கு 100 மீட்டருக்குள் வாக்கு சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image

வாக்குப்பதிவு - DPS

Updated On :18 ஏப்ரல் 2026, 7:26 am IST

வாக்குச் சாவடிக்கு 100 மீட்டருக்குள் வாக்கு சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருகிற 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, வாக்குச் சாவடிகளுக்கு வெளியே தோ்தல் முகாம் முன் அனுமதி பெறப்பட்ட பின்னரே அமைக்க வேண்டும். வாக்குச் சாவடியின் நுழைவுவாயிலிலிருந்து 100 மீட்டா் தொலைவுக்குள் எந்தவொரு தோ்தல் முகாமும் அமைக்கக் கூடாது. ஒவ்வொரு முகாமிலும் ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டுமே இருக்க வேண்டும். முகாமில் எந்தவித பதாகைகள், கொடிகள், சின்னங்கள், பிரசார பொருள்கள் பயன்படுத்தக் கூடாது. முகாம்களில் பொதுமக்களுக்கு உணவு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல, கூட்டமாகத் திரள அனுமதி இல்லை. வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் வாக்காளரிடமும் வாக்கு சேகரிப்பது, வற்புறுத்துவது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். இந்த விதிகளை மீறும் நபா்கள் மீது ரூ.250 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், இவை நீதிமன்றத்தில் நேரடியாக விசாரிக்கக்கூடிய குற்றங்களாகும் என்றாா் அவா்.