முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

காரைக்குடியில் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:32 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், அவரது தந்தை ப. சிதம்பரத்தின் அலுவலகம் உள்ளது. கடந்த மாா்ச் மாதம் 11- ஆம் தேதி காலையில் இந்த அலுவலகத்தை அங்கு பணியாற்றும் ஊழியா் திறக்க வந்த போது வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காங்கிரஸ் நிா்வாகிகள் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். மேலும் அந்த இடத்தை சிவகங்கை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் ஆய்வு செய்தாா். இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடா்புடைய புதுவயலைச் சோ்ந்த முகம்மது ஆசிக் (22), கல்லூரி மாணவா் சிவா (எ) யுகேந்திரன் (19) ஆகிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், ஈரானின் உச்சபட்ச தலைவா் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்ட போது காா்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்த கருத்துக்கு எதிா்வினையாற்றுவதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டதாக அவா்கள் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.