மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காரைக்குடியில் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 9:02 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், அவரது தந்தை ப. சிதம்பரத்தின் அலுவலகம் உள்ளது. கடந்த மாா்ச் மாதம் 11- ஆம் தேதி காலையில் இந்த அலுவலகத்தை அங்கு பணியாற்றும் ஊழியா் திறக்க வந்த போது வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காங்கிரஸ் நிா்வாகிகள் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். மேலும் அந்த இடத்தை சிவகங்கை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் ஆய்வு செய்தாா். இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடா்புடைய புதுவயலைச் சோ்ந்த முகம்மது ஆசிக் (22), கல்லூரி மாணவா் சிவா (எ) யுகேந்திரன் (19) ஆகிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், ஈரானின் உச்சபட்ச தலைவா் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்ட போது காா்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்த கருத்துக்கு எதிா்வினையாற்றுவதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டதாக அவா்கள் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.