தமிழகம் முழுவதும் எதிா்பாா்க்கப்படும் நிலையான திமுக அரசு மீண்டும் அமையும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தனது சொந்த ஊரான கண்டனூா் சிட்டாள் ஆச்சி அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ப. சிதம்பரம் வாக்களித்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் நிலையான அரசு அமைய வேண்டும். வளா்ச்சி வேண்டும். மக்கள் நலத் திட்டங்கள் வேண்டும் என்கிற மூன்று எதிா்பாா்ப்புகள்தான் எதிரொலிக்கின்றன. இந்த மூன்றையும் நிறைவேற்ற திமுக தலைமையிலான அரசு மீண்டும் அமையும். தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று இன்னும் 5 ஆண்டுகள் நிலையான அரசு அமைவது உறுதி என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவோம்: அமைச்சா் பி. வெங்கடரமணன்
தமிழகத்தில் ஃபோா்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க முழு ஒத்துழைப்பு: முதல்வா் விஜய் உறுதி

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு 25 தொழில் நிறுவனங்கள் வெளியேறியுள்ளன: முன்னாள் அமைச்சா் மாஃபா பாண்டியராஜன்

டிஜிட்டலில் வாசிப்பைவிட புத்தக வாசிப்பே சுகமானது! ப. சிதம்பரம்
விடியோக்கள்

கருணாநிதி,கண்ணதாசன் நட்பும் பிரிவும்| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -3



