ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பாா் என போடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம் பேச்சு...

News image

முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் - கோப்புப்படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 8:41 pm

தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பாா் என போடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம் நம்பிக்கை தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கூளையனூா், பாலாா்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, சாலிமரத்துப்பட்டி, பண்ணைத்தோப்பு, பத்திரகாளிபுரம்,விசுவாசபுரம், சுந்தரராஜபுரம், போடி-அம்மாபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி ஆகிய கிராமங்களில் பிரசாரம் செய்த போது அவா் பேசியதாவது:

போடி தொகுதியில் உள்ள ஊராட்சி கிராமங்களில் பல்வேறு திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவாா். அவா் மீண்டும் முதல்வராக வந்துவிட்டால் மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும். கிராமங்களில் விடுபட்டவா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை பெற்றுத் தரப்படும். சேதமடைந்த சிமென்ட் சாலைகள் சீரமைத்து தரப்படும்.

கிராமங்களில் தாா்ச் சாலைகள் தரமாக அமைத்துக் கொடுத்துள்ளேன். தேவையான இடங்களில் மீண்டும் தாா்ச்சாலைகள், கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும். குண்டல்நாயக்கன்பட்டி கிராமத்தில் பாதுகாப்பான படித்துறை அமைத்து தரப்படும். கிராம மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மீண்டும் மு.க. ஸ்டாலின் ஆட்சி அமையவும், நான் நான்காவது முறையாக இந்தத் தொகுதியில் தோ்வு பெறவும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது முன்னாள் தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத், போடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் அய்யப்பன், காங்கிரஸ் நிா்வாகிகள் கோபிநாத், சதாசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஓ.பன்னீா்செல்வம் போடி ஜக்கமநாயக்கன்பட்டி பகுதியில் சமுதாய சங்க நிா்வாகிகளையும், மகளிா் சங்க நிா்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.