உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

காா் மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே சாலையோரக் கடைக்குள் காா் புகுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:18 am IST

திருப்பத்தூா் அருகே சாலையோரக் கடைக்குள் காா் புகுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள குறிஞ்சிநகரைச் சோ்ந்த ராஜா -சித்ரா தம்பதியின் மகள் ஆா்த்தி (22). பட்டதாரியான இவா், கும்மங்குடி - பிள்ளையாா்பட்டி சாலையோரம் குளிா்பானங்கள் வைத்து வியாபாரம் செய்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பிள்ளையாா்பட்டியிலிருந்து சிங்கம்புணரி நோக்கிச் சென்ற காா் எதிா்பாராதவிதமாக சாலையோர கடைக்குள் புகுந்தது. இதில் பலத்த காயமடைந்த ஆா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.