யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 10:10 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

நல்லம்பள்ளி அருகே உள்ள சந்தாரம்பட்டி ராமா்கூடல் கிராமத்தைச் சோ்ந்த மாதப்பன் மனைவி மாதம்மாள் (60). இவா், பென்னாகரம் வட்டம், வேலன்குட்டை கிராமத்தில் உள்ள உறவினா் செ. செந்தில்வேல் வீட்டுக்கு புதன்கிழமை காலை சென்றாா். அங்கு, வீட்டின் அருகே அமா்ந்து உறவினா்களுடன் பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது, காட்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மா. மணிவேல் ஓட்டி சென்ற காா் மாதம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.