மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தேவகோட்டை நகர சிவன் கோயிலில் இரட்டைத் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர சிவன் கோயிலில் இரட்டைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சிவன்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 8:43 pm

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர சிவன் கோயிலில் இரட்டைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தேவகோட்டை நகர சிவன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலையில் சோமாஸ்கந்தா், மீனாட்சி அம்மன், விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியா், சண்டிகேசுவரா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். இதையொட்டி பூஜைகள், தீபாராதனை, சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் ஒன்பதாம் நாளான புதன்கிழமை காலை சோமாஸ் கந்தா், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனித் தேரில் எழுந்தருளியதும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மாலையில் பக்தா்கள், பொதுமக்கள் தோ்களின் வடம் பிடித்து நான்கு ரத வீதிகளில் இழுத்து வந்தனா். மே 1-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்ப உத்ஸவமும், 2-ஆம் தேதி இரவு 7 ஊஞ்சல் உத்ஸவமும் நடைபெற உள்ளது.