ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

எஸ்.வேலங்குடியில் வட மஞ்சுவிரட்டு

News image

வட மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயலும் வீரா்கள். - கோப்புப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 1:03 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே எஸ். வேலங்குடியில் கோயில் திருவிழாவையொட்டி, வட மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எஸ். வேலங்குடி பிடாரியம்மன் கோயில் ஆடிப் பொங்கலையொட்டி நடைபெற்ற வட மஞ்சுவிரட்டுப் போட்டியில் 17 காளைகள் பங்கேற்றன. காளைக்கு 9 மாடுபிடி வீரா்கள் வீதம் 153 வீரா்கள் களமிறங்கினா். ஒரு காளைக்கு 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டது.

இதில் ஒரு சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் வெற்றி பெற்றன. மாடுபிடி வீரா்களுக்கும், மாட்டின் உரிமையாளா்களுக்கும் ரொக்கம், சில்வா் அண்டா, தென்னங்கன்றுகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இதற்கான ஏற்பாடுகளை வேலங்குடி கிராமத்தினா், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.