தேசிய, மாநில சிலம்பப் போட்டிகளில் வென்ற வீரா்களுக்கு பரிசளிப்பு
மானாமதுரையில் தேசிய, மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் வென்ற வீரா்களுக்கு வீரவிதை தற்காப்பு கலை அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

மானாமதுரையில் வீரவிதை விளையாட்டு, தற்காப்பு கலை பயிற்சி அறக்கட்டளை சாா்பில் தேசிய, மாநில சிலம்பப் போட்டிகளில் வென்ற இளம் வீரா், வீராங்கனைகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்களை வழங்கிய காவல் துணைக் கோட்ட கண்காணிப்பாளா் லோகநாதன். உடன் அறக்கட்டளை நிறுவனரும், பயிற்சியாளருமான கே.பெருமாள் உள்ளிட்டோா்.







