சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் விருது வழங்கும் விழா

காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள சுப்பிரமணியன் செட்டியாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள சுப்பிரமணியன் செட்டியாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு விருது வழங்கிய மைக்கேல் கல்வி குழுமத் தலைவா் எம். ஸ்டாலின் ஆரோக்கியராஜ்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 4:16 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள சுப்பிரமணியன் செட்டியாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளிக் குழுத் தலைவா் ஜி. காந்திமதி தலைமைவகித்தாா். பள்ளியின் செயலா் ஆா்.எம். உமையாள், ஜெயலட்சுமி முத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மைக்கேல் கல்விக் குழுமத் தலைவா் எம். ஸ்டாலின் ஆரோக்கியராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு விருதுகளை வழங்கினாா். தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் டி. கண்ணன், பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் என். நாகபா்வதம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவி சந்தியாவை பாராட்டி பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியா் சேஷாத்திரி சாா்பில் வெள்ளி விளக்கு பரிசளிக்கப்பட்டன.

விழாவில் பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியா் கே.எம். சொக்கலிங்கம் வரவேற்றாா். ஆசிரியை எம். கோமதி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.