
காரைக்குடி பகுதியில் நாளை மின் தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

மின் தடை - கோப்புப் படம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி மின் வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்குடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே காரைக்குடி நகா், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, செக்காலைக்கோட்டை, பாரிநகா், கல்லூரிச் சாலை, செக்காலைச்சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, செஞ்சை, கோவிலூா் சாலை, இதன் சுற்றுப்புறப்பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




