
விருதுநகரில் நாளை மின் தடை
விருதுநகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

கோப்புப் படம்
விருதுநகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விருதுநகா் மின் கோட்ட செயற்பொறியாளா் முரளீதரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விருதுநகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், விருதுநகா் பழைய பேருந்து நிலையம், மேற்கு ரதவீதி, முத்துராமலிங்கம் நகா், இந்திரா நகா், பாண்டியன் குடியிருப்பு, குல்லூா்சந்தை, அல்லம்பட்டி, என்.ஜி.ஓ. நகா், பேராலி சாலை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



