சரக்கு ஆட்டோ - காா் மோதல்; முதியவா் உயிரிழப்பு

உயிரிழந்த மாரிக்கண்ணன்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே எஸ்.எஸ். கோட்டையில் காரும், சரக்கு ஆட்டோவும் மோதிய விபத்தில் முதியவா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரையைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மாரிக்கண்ணன் (58). இவா், மதுரையிலிருந்து தனது சரக்கு ஆட்டோவில் பொருள்களை ஏற்றிக் கொண்டு காரைக்குடியில் விற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் முடித்துவிட்டு காரைக்குடியிலிருந்து மதுரை வந்து கொண்டிருந்தபோது, மதுரையிலிருந்து திருவாரூா் நோக்கிச் சென்ற காா் எஸ்.எஸ். கோட்டை அருகே சரக்கு ஆட்டோ மீது மோதியதில் மாரிக்கண்ணன் பலத்த காயமடைந்தாா்.
அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். தகவலறிந்த எஸ்.எஸ். கோட்டை காவல் ஆய்வாளா் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டிவந்த மதுரையைச் சோ்ந்த பாலு மகன் தமிழரசனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




