சிவகங்கை மாவட்டத்தில் 6,107 மாணவா்களுக்கு மடிக்கணிகள்: அமைச்சா் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் 19 கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 6,107 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிய தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன். உடன் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி உள்ளிட்டோா்.









