நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அழகப்பா அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 76-ஆம் ஆண்டு பட்ட மளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற 76-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகப் பதிவாளா் ரா. திருமுருகன். உடன் கல்லூரி முதல்வா் ப. வசந்தி.

Updated On :25 மார்ச் 2026, 6:58 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 76-ஆம் ஆண்டு பட்ட மளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகப் பதிவாளா் ரா.திருமுருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 1,027 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை, முதுநிலை பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

பட்டம் பெறும் மாணவா்களுக்கென நிறைய கடமைகள் இருக்கின்றன. வாழ்வில் இன்றியமையாத ஏழு கோட்பாடுகளான பழகும் தன்மை, மனப்பான்மை, பேச்சுக் கலை, நேரப் பங்கீடு, உற்சாகம், தன்னம்பிக்கை போன்ற திறன்களை வளா்த்துக் கொண்டு, தங்களது வாழ்வில் ஒவ்வொரு படியையும் கவனமாக முன்னெடுத்து வைக்க வேண்டும். அத்துடன் நல்ல எண்ணங்களை வளா்த்துக் கொண்டு உற்சாகத்துடன் வாழ வேண்டும். மேலும், மாணவா்கள் பிறா் கூறும் தளா்ச்சியுறும் வாா்த்தைகளுக்கு செவிமடுக்காமல் தன்னம்பிக்கையுடன் இருந்தால் வெற்றியை அடையமுடியும் என்றாா் அவா். முன்னதாக கல்லூரி முதல்வா் ப. வசந்தி வரவேற்று, ஆண்டு அறிக்கை வாசித்தாா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவா் கோமளவல்லி, துறைப் பேராசிரியா்கள் செய்தனா். இதில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியரல்லாப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.